தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஜேர்மன் கிளையின் அனுசரணையில் சுற்றுலா-(படங்கள் இணைப்பு)
தழிழீழ விடுதலைக் கழகத்தின் பிரித்தானியக் கிளையினரின் உதவியுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக யாழ். சுழிபுரம் பகுதியில் மணவர்களுக்கான இலவசக் கல்வி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தழிழீழ விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கழகத்தின் ஜேர்மன் கிளை மேற்படி சுற்றுலாவுக்கான நிதி வசதியினை வழங்கியிருந்தது.
இந்நிலையில் கடந்த 06.03.2016 அன்று மேற்படி கல்வி நிலையத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மகிழ்வுடன் பார்வையிட்டிருந்தனர்.