மழையையும் பொருட்படுத்தாது போராடிய மாணவர்கள்-
மட்டக்களப்பு, வாகரை – கட்டுமுறிவுகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள், திருகோணமலை பிரதான வீதியின் இரு பக்கமும் அமர்ந்து மழையில் நனைந்த வண்ணம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, எப்ப ஆசானைத் தருவீர்கள், நல்லாட்சி அரசாங்கமே நலமாக வாழ உடன் தீர்வு தாருங்கள், எங்கள் கனவை நனவாக்க நல்ல அரசாங்கமே நல்ல ஆசானை தா, வாய் பேச்சு வேண்டாம் நடைமுறைப்படுத்து, தீர்வைப் பெற்றுத் தாருங்கள், கல்வியே வாழ்வின் ஒளி, பாடசாலை வரலாற்றில் ஆங்கில பாடம் கற்பிக்க வேண்டும், எமது உரிமையைப் பெற்றுத் தாருங்கள், காலத்தை வீணாக்காதே உடன் தீர்வு வழங்கவும், மிக விரைவில் நியமனம் பெற்றுத் தர வேண்டும், எங்களது கல்வியைத் தாருங்கள் என பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். இதில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இப் பாடசாலையானது கதிரவெளி பிரதான வீதியிலிருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிகவும் கஷ்டப் பிரதேச பாடசாலையாகும். இங்கு தரம் 11 வரை 170 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அத்தோடு இங்கு 06 ஆசிரியர்கள் மாத்திரம் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். Read more