பிரதமர் ரணில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த சந்திப்பு-

ranil mahindaபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இந்தச் சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சென்றிருந்ததுடன்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இருந்துள்ளார். இதேவேளை, இராணுவத்துக்குப் பொறுப்பாக ஜனாதிபதியும் பொலிஸ{க்கு பொறுப்பாக பிரதமரும் இருக்கின்றனர். இந்நிலையில், பாதுகாப்புச் சபை எடுத்த முடிவுக்கு அமையவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமன்றி, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் அகற்றப்படவுள்ளதாக தெரியவருகின்றது. முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை அகற்றிக்கொள்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கே, பாதுகாப்பு கவுன்சில் அங்கிகாரமளித்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். கொழும்பு சொகுசு பஸ்ஸில் முதிரைக் குற்றிகள் கடத்தல்-

fdfdfdfயாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு பஸ்ஸில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் சிறாட்டிக்குளம் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்டபோது பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சாரதி கைதாகியதுடன், வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியுள்ளனர். குறித்த பஸ் தற்போது மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயணிகள் பஸ்ஸின் உட்கட்டமைப்பானது பயணிகள் இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டு மரக்குற்றிகள் கடத்தலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்துள்ளது. குறித்த பஸ்ஸில் இதற்கு முன்னரும் பல தடவைகள் சில உள்ளுர் பொலிசாரின் ஒத்தாசையுடன் நடைபெற்று வந்துள்ளது எனவும், அப்பகுதி மக்கள் இது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டு அவரின் தலைமையில் கீழ் செயற்படும் விசேட குற்றத் தடுப்புப் பிரிவினரே மேற்படி பஸ்ஸினை மரக் குற்றிகளுடன் பிடித்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக யாழ் – கொழும்பு சொகுசு பஸ்களில் கஞ்சா கடத்துவது உள்ளிட்ட பல்வேறு மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிவேக வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் அதிகாரம்-

highwayஅதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்-

7y68787வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கற்கை நெறியைக் கற்று வெளியேறிய மாணவர்கள், தமக்கு அரசாங்க வேலையைப் பெற்றுத்தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தில் மொத்தம் 350பேர் இருப்பதாகவும் தங்களுக்கு நிபந்தனைகள் இல்லாமல் நேரடியாக உள்வாங்கும் படியும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களும் தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு விஜயம்-

ranil wickramaஉத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு செல்கின்றார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட 15பேர் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவ்விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கான சீனாவின் முதலீடுகள் தொடர்பில், இந்த விஜயத்தின்போது விசேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு-

parliamentஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மூன்று அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

லக்ஸ்மன் செனவிரத்ன (ஐ.ம.சு.மு.) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சராகவும்,

பாலித தேவரப்பெரும (ஐ.தே.க) உள்விவகாரம், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார (ஐ.ம.சு.மு) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.