கணணித் தொகுதிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)
வலி மேற்கு சுழிபுரம் பகுதியில் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முழுமையான அனுசரணையுடன் இயங்கி வருகின்ற இலவச கல்வி மையத்திற்கு தழிழீழ விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையினர் மூன்று கணணித் தொகுதிகளை குறித்த அவ் அமைப்பின் உறுப்பினர் தோழர் சாமியார் (சபாரட்ணம். ஜெயகுமார்-ஜேர்மனி) குறித்த கல்வி நிலையத்தில் கற்பிக்கும் திரு.க.சண்முகநாதன்(இளைப்பாறிய மாவட்ட பதிவாளர்) மற்றும் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் தோழர்.சின்னகுமார் அவர்களிம் கையளித்தார். அண்மையில் குறித்த கல்வி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்ட தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் குறித்த கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த இலவச நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியின் பொருட்டு இவ் கணணிகள் வழங்கி வைக்கப்பட்டன.