வியாபாரிமூலை கலைமணியின் கல்விக் கௌரவிப்பு விழா-2016-(படங்கள் இணைப்பு)
பாடநெறிகளில் விசேட சித்திபெற்ற மாணவ, மாணவியரைக் கௌரவிக்கும் நிகழ்வு பருத்தித்துறை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம் மற்றும் விக்னேஸ்வரா படிப்பகத்தில் கலைமணி சனசமூக நிலையத் தலைவர் திரு. க.கதிரமலை (முன்னைநாள் கல்விப் பணிப்பாளர்) அவர்களின் தலைமையில் கடந்த 14.04.2016 வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. சுகிர்தன் (முன்னைநாள் உயர்தொழில்நுட்பவியல் நிறுவன முன்னாள் பணிப்பாளர்), திரு. பா.கஜதீபன் (வட மாகாணசபை உறுப்பினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடநெறிகளிலே விசேட சித்திபெற்ற மாணவ, மாணவியர் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.