வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தல்-

sdsdsdsயாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதன் பின்னர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதன்போது அவர் கூறியதாவது, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் எமது மக்களுக்க பொருத்தமாக இருக்குமென நினைக்கவில்லை. எமது மக்களின் பரம்பரையான நடவடிக்கைகளில் மாற்றத்தினைக் கொண்டு வருவதனை விரும்பவில்லை. அது மக்களின் கலாச்சாரத்துடன் பிண்ணிப் பிணைந்த விடயம். ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் பல வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், பொருத்து வீடுகள் கட்டப்படவில்லை, ஏன் யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடுகள் கட்டப்பட வேண்டும். ஒரு சாதாரண வீடு கட்டுவதை விட இரண்டு மடங்கு பணம் செலவிடப்பட வேண்டியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது, குறித்த 65 ஆயிரம் வீடுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஊடகங்களில் செய்திகளை பார்த்தோம். எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு முன்வைத்து அந்த 65ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்த மீள் பரிசீலணைக்குட்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜீ7 நாடுகளின் மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு-

maithriஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகளின் மாநாட்டின் விசேட விருந்தினராக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அடுத்த மாதம் ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானிய பிரதமர், சின்சோ அபேயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவ நாடுகளும் இதில் பங்கேற்கின்றன. அதன் 47 வது வருடாந்த மாநாடு, எதிர்வரும் மே மாதம் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் ஜப்பானில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் கலந்து கொள்கின்ற நிலையில் அவர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நிலக்கரி மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்-

ertrtrtttதிருகோணமலை, மூதூர் கிழக்கு சம்பூரில் அமைய உள்ள நிலக்கரி மின் நிலையத் திட்டம் வேண்டாம் எனக் கோரி சம்பூர் மீள் குடியேற்ற கிராம மக்கள் இன்று காலை சம்பூர் அரசடி விநாயகர் கோயிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக மட்ட பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனிடம் கையளித்து அவருடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.