சங்கலியன் தோப்பில் தமிழக பட்டிமன்ற புகழ் ராஜா மற்றும் பாரதி பங்கேற்புடன் பட்டிமன்றம்-(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில் தமிழக பட்டிமன்ற புகழ் ராஜா மற்றும் பாரதி ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றம் ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதன்போது புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன்,
தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோ ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பட்டிமன்றவாத குழுவினரை கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.