Header image alt text

உலக பாட்டாளி மக்கள் தினம் -2016

Captureஇன்றைய நாள் உலக பாட்டாளி வர்க்கத்தின் வெற்றித் திருநாள், சிந்திய வியர்வைத் துளிகளுக்கு பெருமை கிடைத்த உலக வரலாற்று பெருமைமிக்க நாள். ஒவ்வோர் தொழிலாளர்கள் கைகளிலும் இவ் உலகின் உயர்ச்சி தங்கியுள்ளது என்பதனை நிறுவும் நாள். இவ் நாளில் ஒவ்வோர்வரும் பாட்டாளி வர்க்கத்தினரும் அணிசேர்த்து அவர்கள் தம் பெருமையினையும் புகழினையும் உலகறியச் செய்ய முயற்சிக்க வேண்டும். இவ் வகையில் இவ் இலங்கைத் தீவிலும் தமிழ் தேசியத்தின் வழி நின்று வன்கொடுமைகளாலும், வன் கொடூரங்களாலும் அவலப்பட்டு வடுக்கள் மாறாத நிலையில் வாழ்ந்து வரும் எம் தொழிலாளர் வர்க்கத்திற்கு உயிர்ப்பூட்டி அவர்கள் எதிர்கால நம்பிக்கைகளோடு வாழ வழி ஏற்படுத்திட வேண்டும். கடந்துவிட்ட காலங்களில் எங்கள் வரலாறுகள் தந்த பல அனுபவங்களை வழிகாட்டியாக கொண்டு நிகழ்காலத்தினை வழி நடாத்துவதோடு எதிர்காலத்தினையும் செம்மைப்படுத்த முயல வேண்டும்.

விளைந்து மகிழ்ந்த எம் விளை நிலங்களில் மீண்டும் விளைவுகண்டு மகிழ்ந்திடவும், அலை அன்னைமீதினில் நிலவு வழிகாட்டிட வீசிய வலைகள் மீண்டும் விளைவை தந்திடவும், அழிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட முல்லைகளில் மீண்டும் செழித்து சிறந்திடவும், கபளீகரம் செய்யப்பட்ட எம்மவர் நிலங்கள் மீண்டு வந்திடவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர் துளிகளுக்கு மீட்சி கிடைத்திடவும், சிறைகளில் விடுதலைக்கு ஏங்கி நிற்கும் உள்ளங்களுக்கு உரிய பதில் கிடைத்திடவும், பெண் கொடுமைகளுக்கு முற்று வைத்திடவும், சுரண்டப்பட்டு சூறையாடப்பட்ட மற்றும் சூறையாடப்பட்டு வரும் எம் தொழிலாளரின் உழைப்பிற்கு உரிய தீர்வு கண்டிடவும், நாட்டின் நல்லாட்சி உறுதிப்பட்டிடவும், எம் இன இலட்சியம் நிறைவு கண்டிடவும் அனைவரும் நாம் தமிழர்கள் என்ற இன ஒற்றுமையால் உறுதி கொண்டு இவ் நாளில் எம் கோசங்களை வானுயர உயர்த்துவோம். என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்,

திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன்,
முன்னாள் தவிசாளர்,
வலி மேற்கு பிரதேச சபை
(தமிழ் தேசிய கூட்டமைப்பு)

முன்னாள் புலி உறுப்பினர்கள் கைதானமை தொடர்பாக பாதுகாப்பு செயலாளர்-

karunasenaமுன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்தியத் தளபதிகள் சிலர் கைதுசெய்யப்பட்டமை யாழில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காகவே என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், சாவகசேரி நீதிமன்றத்தால் இன்றுபகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கீதா குமாரசிங்க, சாலிந்த திஸாநாயக்க பதவி நீக்கம்-

dsdfdfdffஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி, புதிதாக நியமனம்பெற்றவர்களின் விபரம் வருமாறு,

கம்பஹா மாவட்ட அமைப்பாளர் – பிரதீப் ஜெயவர்த்தன
கிரியால ஆசன அமைப்பாளர் – வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க
கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள் – மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் காமினி டி சில்வா மற்றும் புத்திக இத்தமல்கொட
களுத்துறை மாவட்ட அமைப்பாளர் – மனுல சமல் பெரேரா
காலி மாவட்ட அமைப்பாளர் – பியல் தர்ஷன குருகே
கேகாலை மாவட்ட அமைப்பாளர் – நலின் புஷ்பகுமார
குருநாகல் மாவட்ட அமைப்பாளர் – துஷார திலகரத்ன
பெந்தர – எல்பிடிய இணை அமைப்பாளராக – பெந்தோட்டை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் கயான் கிரிஷான் சிறிமான்ன
மற்றும் எல்பிடிய பிரதேசசபையின் முன்னாள் தலைவர் அமில ஹர்ஷன

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்-

e444மாலபே மருத்துவக் கல்லூரியை இரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள்மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டு விரட்டியடித்துள்ளனர். மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வைத்தியப்பீட மாணவர்கள் பேரணியினை முன்னெடுத்திருந்தனர். இதன்மீது கண்ணீர்புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை வரைக்கும் பேரணியாக வந்து கொண்டிருந்துள்ளனர். அவர்கள், ஜனாதிபதி செயலகம் வரைக்கும் பேரணியாக செல்வதற்கு முயன்றபோதே, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வைத்து, பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்குண்டு பிரயோகித்தும், தண்ணீர்தாரை பிரயோகம் செய்தும் விரட்டியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யோஷித தொடர்பில் கடற்படை விசாரணை-

yosithaபாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர், யோஷித ராஜபக்ஷ தொடர்பில், கடற்படையினரின் விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதுவரையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் படைத்தரப்பு அறிவித்துள்ளது. கடற்படையின் கெடெட் அதிகாரியாக அவர் சேர்வதற்கான தகுதிகள் இருந்தனவா? அவை தொடர்பில் படைத்தரப்பு ஆய்வு செய்துள்ளதா? மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியன தொடர்பிலேயே, கடற்படையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல், கடற்படையிலிருந்து யோஷித ராஜபக்ஷ, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மீதான நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளைத் தொடர்ந்து, கடற்படையின் விசாரணைகள் ஆரம்பிக்கும் என்றும் படைத்தரப்பு கூறியுள்ளது.

சமஷ்டி பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி நிராகரிக்கிறது-

rilwin silvaவட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கை இணைப்பதற்கான சமஷ்டி பிரேரணையை நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரேரணைகளுக்கும், சமாதானத்தை சீர்குழைக்க முயற்சிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் மக்கள் விடுதலை முன்னணி தமது ஒத்துழைப்பை வழங்காது எனவும் அவர் கூறியுள்ளார். மக்களுடன் இணைந்து செயற்படுவதே மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம் எனவும் இந்த ஊடகவியலளார் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விமானப் படையின் ஹெலிக்கொப்டர் விபத்து-

sasassபொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஹெலிக்கொப்டர் சிறிதளவு சேதம் அடைந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விபத்தினால் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புக்களே ஏற்படவில்லை என, விமானப் படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பில் தற்போது விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின்பேரில் 27 இளைஞர்கள் கைது-

788யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என பலர் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள். யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். Read more

புதுக்குடியிருப்பில் காணி அபகரிக்கும் நில அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது-

puthukudiyiruppuமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரின் தேவைக்காக காணிகள் அபகரிக்கும் நிலஅளவை செயற்பாடுகளை பொதுமக்கள் பாரளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாலுள்ள மக்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் காணியை அபகரிப்பதற்காக நிலஅளவை செயற்பாடுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்விடத்தில் கூடிய பொதுமக்கள் குறித்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், அன்டனி ஜெகநாதன் உள்ளிட்டோரும் இணைந்து படையதிகாரிகளுடன் நிலஅளவை அதிகாரிகளுடனும் சுமுகமாக பேசி அளவீடு நடவடிக்கையினை நிறுத்தியுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், நாயாறு உள்ளிட்ட பிரதேசங்களில் படையினரின் தேவைக்காக நேற்று முதல் காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்களும் அரசியற் கட்சிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது-

sivakaranஇலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் இன்று பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சிவகரனை கைதுசெய்ய வந்த அதிகாரிகள் துண்டு ஆவணமொன்றை வழங்கியுள்ளனர். குறித்த துண்டில், ‘பாதுகாப்பு அமைச்சின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ், அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகரனை கைதுசெய்ததற்கான காரணம் எதையும் அதிகாரிகள் சொல்லவில்லை. கைதுசெய்யப்பட்ட சிவகரன், வவுனியா பயங்கரவாத விசாரனை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழீழ வைப்பக நகைகளை தேடி வேட்டை-

wer4weவிடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகளை தேடி, புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் தோண்டும் பணி, நேற்று மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கேப்பாபுலவு வீதியிலுள்ள லூத்மாதா சந்தியில் இயங்கிய தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை, அதற்கு முன்னாள் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் இருந்த மண் கிணற்றுக்குள் போட்டு, மூடியதாக தமிழீழ வைப்பகத்தில் கடமையாற்றிய உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். அதனை முல்லைத்தீவு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், நீதவானின் நேரடி பிரசன்னதுடன் தோண்டும் பணிகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சரியான இடத்தை தெரிவு செய்வதில் இருக்கும் சிக்கல் நிலையால் 1 ஏக்கர் அளவிலான இடம் தெரிவுசெய்யப்பட்டு, அதற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த தோண்டும் பணிகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர். நேற்று இரவு நிறுத்தப்பட்ட தோண்டும் பணிகள் மீண்டும் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பந்தன் பதவிவிலக வேண்டுமென கோரி சத்தியாக்கிரகப் போராட்டம்-

45665இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு இன்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியானவர் இல்லை, இவர் உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்கள். கடந்த 16ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர், பரவிப்பாஞ்சானில் உள்ள கஜபா படைப்பிரிவின் தலைமையக இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர் எனவும், இதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். தற்போது நாட்டில் தமிழ் மக்கள் எந்த இடையூறுகளும் இன்றி நிம்மதியாக வாழுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த சுதந்திரமும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சத்தியாகிரக போராட்டத்தில் சரத் மனமேந்திர, பத்தரமுல்லே சீலரத்தின தேரர் உட்பட மேலும் முக்கியமான ஏழு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மனுஸ் தீவு தடுப்புமுகாம் அரசியலமைப்பிற்கு முரணானது-நீதிமன்றம்-

manus island campஅகதிகளையும், தஞ்சக் கோரிக்கையாளர்களையும் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ளது அரசியலமைப்பிற்கு முரணானது என்று பப்புவா நியூகினியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத குடியேறிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தவிர அனைவரினதும் தனிப்பட்ட சுதந்திரத்தை பப்புவா நியூ கினியின் அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கடல் பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நாட்டிற்கு வெளியே வைத்து விசாரிக்கும் அவுஸ்திரேலியாவின் கொள்கையின் கீழ் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து அவுஸ்திரேலியா பரிசீலித்து வருகிறது. சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதை முடிவிற்கு கொண்டுவர தேவையான நடைமுறைகளை பின்பற்றுமாறு பாப்புவா நியூகினி மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அரசாங்கங்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மனுஸ் தீவில் கிட்டத்தட்ட 850 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுனர். அனைவரும் ஆண்கள். தஞ்சக் கோரிக்கையாளர்களும் அகதிகளும் தாமாக முன்வந்து பப்புவா நியூ கினிவிற்குள் வந்திராத ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டினுள் சட்விரோதமாக வந்தவர்கள் என பார்க்க முடியாது என நீதிபதிகள் குழு அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. பாப்புவா நியூ கினி நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவுஸ்திரேலிய குடிவரவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நகுலனிடம் தொடர் விசாரணை, கலையரசன் என்கிற அறிவழகன் கைது-

nagulan LTTEகைது செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் கட்டளையிடும் அதிகாரியாக இருந்த கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்றழைக்கப்படும் நகுலனிடம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் கோப்பாயில் வைத்து அவர், நேற்றுமாலை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான ராம் என்கிற இதிமலசிங்கம் அரிச்சந்திரன் வழங்கிய தகவல்களையடுத்து நகுலன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்றழைக்கப்படும் நகுலன் இறுதி யுத்த காலத்தில் நாட்டிலிருந்து தப்பிச் சென்று பின்னர் புதுமாத்தலன் பிரதேசத்திற்கு வருகை தந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் நலன்புரி முகாமில் சில ஆண்டுகள் இரகசியமான முறையில் வாழ்ந்துள்ளதுடன், அங்கு இவர் திருமணம் முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை புலிகளின் முன்னாள் திருகோணமலை புலனாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் என்றழைக்கப்படும் அறிவழகன் திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து நேற்றுக்காலை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

 

தந்தை செல்வாவின் 39ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

39 th thanthai selva 26.04 (7)தந்தை செல்வாவின் 39ஆவது நினைவு நாளான இன்றுகாலை 9.00மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா சதுக்கத்திலுள்ள நினைவிடத்தில் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் குழுத் தலைவர் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்களது தலைமையில் இந் நினைவுதின நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் புத்திரர் சந்திரகாஸன், ரொறன்ரோ பல்கலைக் கழகப் பேராசிரியர் வணபிதா கலாநிதி ஏ.ஜே.சந்திரகாந்தன்,

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தந்தை செல்வா அறங்காவற் குழு உறுப்பினர் வி.ஜி.தங்கவேல், இந்தியத் துணைத் தூதுவர் அ.நடராஜன், மௌலவி எம்.ஐ .மஹ்மூத் (பலாஜி), அருட்தந்தை இமானுவல் செபமாலை அடிகள், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வடமாகாண சபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், இ.ஆர்னோல்ட், எஸ்.சிவயோகன், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் அமைப்பாளர் க.அருந்தவபாலன், வலி தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச தவிசாளர் தி.பிரகாஷ், வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி. மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சனி ஐங்கரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் திருமதி. கோமதி ரவிதாஸ், வலி.வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் சி.ஹரிகரன் தந்தை செல்வா அறங்காவற் குழுவின் செயலாளர் பேராசிரியர் ச.சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

 

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் ஏழாலை மக்களுடன் சந்திப்பு- (படங்கள் இணைப்பு)

DSC02493கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறியும் நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (24.04.2016) ஏழாலையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஏழாலை பிரதேச சமூக சேவையாளரும், முன்னைநாள் புகையிரத திணைக்க உத்தியோகத்தருமான திருஞானசம்பந்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னைநாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரகாந்தன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஏழாலைக் கிராம மக்களுடன் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், அரசியல் தீர்வுத் திட்டங்கள், காணிப் பிரச்சினைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மக்களின் பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. Read more

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் சாவகச்சேரி வைத்தியசாலையின் நிலைமைகள் ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

20160422_112000யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 22.04.2016 வெள்ளிக்கிழமை அன்று விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்

வைத்தியசாலையை பார்வையிட்டு அங்கிருக்கின்ற குறைபாடுகள் தொடர்பாக டொக்டர் குகதாசன் அவர்களின் தலைமையிலான வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வைத்திய அதிகாரிகள் அங்குள்ள குறைபாடுகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பன தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களிடம் தெரிவித்தார்கள். இது சம்பந்தமாக சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். Read more

தம்பசிட்டி சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக பரிசளிப்பும், கலைநிகழ்வும்-(படங்கள் இணைப்பு)

P1370039யாழ். தம்பசிட்டி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் 109ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வினை முன்னிட்டு தம்பசிட்டி தசாவதானி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலைய சதாவதானி அரங்கில் பரிசளிப்பு விழாவும் கலைவிழாவும் கடந்த 21.04.2016 திரு. கஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. நடராஜன், கலாநிதி சர்வானந்தன், ரி.ராமேஸ்வரன் (செயலாளர், நகராட்சி மன்றம்) ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதன்போது பரீட்சைகளில் விசேட சித்திபெற்ற பிள்ளைகளுக்கான பரிசளிப்பும் பிள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். Read more

சங்கலியன் தோப்பில் தமிழக பட்டிமன்ற புகழ் ராஜா மற்றும் பாரதி பங்கேற்புடன் பட்டிமன்றம்-(படங்கள் இணைப்பு)

IMG_3797யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில் தமிழக பட்டிமன்ற புகழ் ராஜா மற்றும் பாரதி ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றம் ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதன்போது புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன்,

தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோ ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பட்டிமன்றவாத குழுவினரை கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை- சிறீலங்கா சுதந்திரக் கட்சி-

mahinda samarasingheஇலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை பற்றி பேச்சு நடத்துவதற்கு கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. ஃபெடரல் ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அதனால், நாம் வென்றெடுத்துள்ள அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்திரமற்ற நிலைக்குத் தான் செல்லும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கி நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களை வழங்குவது பற்றி பேச்சு நடத்தினாலும் சமஷ்டி முறைக்கு ஒருபோதும் தமது கட்சி ஒத்துழைப்பு அளிக்காது என்றும் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். மாகாண சபைகள் தேவையானால் தீர்மானங்களை நிறைவேற்றி இங்கு அனுப்ப முடியும். ஆனால், எமது தரப்பிலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் கிடைக்காது. வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கும் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என்று அரசாங்கத்தின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக உள்ள மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுவீடன் தூதரகத்தை அமைக்குமாறு கோரிக்கை-

swedenசுவீடன் தூதரகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென சிவில் சமூகத்தினர் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த விஜயத்தின்போது, யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்த சந்திப்பின் போது, முன்னைய காலத்தில் சுவீடன் தூதரகத்தினால் பல நன்மைகள் பெற்றுக்கொண்டதன் காரணத்தினால், இங்கு தூதரகம் அமைப்பது பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன், யாழ். மாவட்ட தண்ணீர்ப் பிரச்சினைகள் மற்றும் போரின் பின் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், உட்பட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர், சிவில் சமூகத்தின் கருத்துக்களை தான் பெறுமதி மிக்கதாக ஏற்றுக்கொண்டு, தனது பலத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை, உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு-

kenany universityகளனிப் பல்கலைக்கழகத்தை ஒரு வாரமளவில் தற்காலிகமாக மூட, பல்கலைக்கழக நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பிரதான வைத்திய அதிகாரிகள் மற்றும் களனி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அறிவுரைப்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக விடுதியில் பரவிய ஒருவகை நோயே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. இதன்படி, இன்று முதல் மே மாதம் 3ம் திகதி வரை பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளதோடு, மே மாதம் 04ம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பல்கலைக்கழக உபவேந்தர், மூத்த பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார கூறியுள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக விடுதியிலுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 05.00 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சபாநாயகர் எம்.எச் மொஹமட் காலமானார்-

mohamedமுன்னாள் சபாநாயகரும், அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச் மொஹமட் தனது 95 ஆம் வயதில் இன்று காலமானார். கொழும்பு மாநகர சபையூடாக அரசியலில் பிரவேசித்த அவர் மாநகர சபையின் மேயராகவும் பதவிவகித்துள்ளார். பின்னர் பாராளுமன்றத்திற்கு தெரிவான எம்.எச்.மொஹமட், டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தில், தொழில் மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். மேலும் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்த எம்.எச்.மொஹமட் பாராளுமன்றத்தின் 14 ஆவது சபாநாயகராக செயற்பட்டார். பொரளை பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அன்னாரின் வீட்டில் ஜனாசா வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள், தையல் இயந்திரம் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

e2நேற்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமைக் காரியாலத்தில் வைத்து பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் தையல் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் மற்றும் தையல் இயந்திரம் என்பவற்றை தந்துதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வட்டு இந்துக் கல்லூரி வட்டு மத்திய கல்லூரி வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை மற்றும் மூளாய் சுப்பிரமணிய வித்தியசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கான மேற்படி உதவிகள் வட்டு இந்து வாலிபர் சங்க தலைமைக் காரியாலத்தில் வைத்து 24.04.2016 அன்று சங்கத்தின் தலைவரது தலைமையில் வழங்கப்பட்டது.

மேலும் வட்டு இந்துக் கல்லூரி விசேட கல்வி பயில்வோரின் அலகிற்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதற்கான நிதி அன்பளிப்புக்களை வட்டுக்கோட்டையச் சேர்ந்த வள்ளிபுரம் (36500ரூபா) மானிப்பாயைச் சேர்ந்த நாகமணி இராஜேஸ்வரி (10000ரூபா) மற்றும் புலம்பெயர் உறவுகளான இந்தியாவைச் சேர்ந்த அழகர் ஈஸ்வரன் (10000ரூபா) அமெரிக்காவைச் சேர்ந்த சி.சிவநாதன் (10000ரூபா) ஆகியோரால் வழங்கப்பட்டிருந்தது. எமது மாணவச் செல்வங்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக உதவிய உறவுகளுக்கு எமது சங்கத்தின் சார்பிலும் மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்) Read more