Header image alt text

மரண அறிவித்தல்

Posted by plotenewseditor on 3 May 2016
Posted in செய்திகள் 

மரண அறிவித்தல்-

aanaaகுருநாகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிதம்பரபுரத்தை வாழ்விடமாகவும் கொண்ட எமது அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ராசலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் (02.05.2016) திங்கட்கிழமை அகால மரணமானார்.

துணிவும், நேர்மையும், துடிப்பும் மிக்க இவர், தனது அன்பாலும் தொண்டுகளாலும் மக்களின் மனதில் இடம்பிடித்தவர். சமூக மேம்பாட்டில் அதீத அக்கறை கொண்டு தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்.

அன்னாரது இழப்பினை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் சொல்லொணாத் துயர் சுமந்து ஆறாத் துயரோடு, அஞ்சலித்து எம்தேசத்து நேச நெஞ்சங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)plote

குறிப்பு – அன்னாரின் பூதவுடல் வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை பிற்பகல் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. தொடர்புகட்கு : (0775157375 – சகோதரி)

சர்வதேச ஊடக தினம் யாழில் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

oodaka ninaivu (4)சர்வதேச ஊடக தினம் நேற்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. உதயன் குழுமத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஊடக தின ஆரம்ப நிகழ்வாக மரணித்த ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ். பண்ணைக் கடற்கரையில் மரம் நாட்டுதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் மரணித்த 13ஊடகவியலாளர்களின் உருவப்படங்களுக்கும் மலராஞ்சலி செலுத்தி நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட மௌனாஞ்சலியும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஆகியோரும், மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், எஸ். சுகிர்தன், ஆனோல்ட் ஆகியோரும்; மேலும் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். Read more

முத்தையன்கட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

muththaiyankattu (5)முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெறுவதால் தற்காலிகமாக விவசாயத் தொழிலை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உலக வங்கியின் அனுசரணையுடன் அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக அவர்களது குடிநீர்ப் பிரச்சனை மற்றும் காசுக்கான வேலை வழங்குதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்), வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் நிரஞ்சன், உலக வங்கியின் இலங்கைப் பிரதிநிதி, வடமாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் சிறீஸ்கந்தராசா மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர் Read more

யாழ். கந்தரோடை மேற்கு ஞானவைரவர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும்-(படங்கள் இணைப்பு|)

P1370219யாழ். கந்தரோடை மேற்கு ஞானவைரவர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 30.04.2016 சனிக்கிழமை முன்பள்ளியின் தலைவரது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிதெற்கு பிரதேச சபையின் முன்னைநாள் தவிசாளர் திரு. ரி. பிரகாஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு கொடியேற்றம் மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெற்றோர் மற்றும்; கிராம மக்களும் பெருமளவில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுத்திருந்தனர். Read more

வட மாகாண நீர் வழங்கல் சேவைகள் தொடர்பான திட்ட மீளாய்வு கூட்டம்-

kudineer original picsவட மாகாண நீர் வழங்கல் சேவைகள் தொடர்பான திட்ட மீளாய்வு கூட்டம் நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது பங்கேற்புடன், மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்கள் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டப் பணிப்பாளர் தி.பாரதிதாசன், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண அவைத்தலைவர் சி.விகே.சிவஞானம், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இரணைமடுகுளத்து நீரைக் கொண்டு அல்லது உப்புநீரை நன்னீராக்குவதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீர் வழங்குவது சம்பந்தமாக இதன்போது ஆழமாக ஆராயப்பட்டது. இதன்போது இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர்த்திட்டம் அவசியமானது என்றும், அதனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் பலராலும் வலியுறுத்தப்பட்டது. இரணைமடுக்குளத்தில் வறட்சி ஏற்பட்டால் மாத்திரமே உப்புநீரை நன்னீராக்கி வழங்கமுடியும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. Read more