மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் மற்றும் மாதர் சங்கங்களுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்பவற்றுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான 2015ஆம் ஆண்டின் மூலதன நன்கொடை நிதியிலிருந்து தளபாடங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களுடன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசபைத் தலைவர், செயலாளர், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.