குமுழமுனையில் வேள்ட்விஷன் நிறுவனத்தாரின் கௌரவிப்பு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குமுழமுனை கிராமத்தில் வேள்ட்விசன் நிறுவனத்தினர் முதியவர்களை கௌரவித்தல், பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்களை கௌரவித்தல் மற்றும் வன்னி மேம்பாட்டுப் பேரவையினால் இரண்டு மாணவர்களுக்கு கணனி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது,
கரைதுறைபற்று பிரதேச செயலாளர் கரைதுறைபற்று உதவிப் பிரதேச செயலாளர் வேள்விசன் நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் குமுழமுனை பிரதேச வைத்தியர் கிராமசேவகர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர் ஆகியோரும் அதிதிகளாக கலந்துகொன்டிருந்தனர். மேற்படி பொதுநோக்கு மண்டபத்துக்கான மின் இணைப்பு மற்றும் மின் உபகரணங்களையும் மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் வழங்கி வைத்தார்.