வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கலாசார நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)-

f6f6241f-8871-4447-88fd-e7220d0272d6வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் வவுனியா பிரதேச சம்மேளன கழகங்களின் ஒத்துழைப்புடன் மாபெரும் கலாசார மற்றும் புதுவருட விளையாட்டு விழா இளைஞர் கழகத்தின் மாவட்ட சம்மேளன முன்னாள் தலைவர் திரு ரி.அமுதராஜ் அவர்களது தலைமையில் நேற்று (07.05.2016) சனிக்கிழமை சிதம்பரபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் இறுதி நிகழ்வான பரிசளிப்பு நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். நிகழ்வில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், எமது பிரதேச இளைஞர்களின் ஆக்கமும், ஊக்கமும் தான் இன்றைய கலாசார நிகழ்வின் வெற்றியின் திறவுகோல். இளைஞர்களின் மூலமே சிறந்த சமூதாய கட்டமைப்பை நாங்கள் எமது கிராமங்களில் தோற்றுவித்து வளமான எதிர்காலத்தினை நாம் உருவாக்க என்றும் முயற்சி உள்ளவர்களாக திகழ வேண்டும். அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகம் தனது உயரிய சிந்தனையுடன் தொடர்ந்தும் இளைஞர்களின் முன்னேற்ற பாதைக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

5e197a04-9116-45e5-a7e0-1de32ad510cb 5f53dd48-933e-43d4-837a-e30986f66be6 9f65da3f-9eb4-46c0-a4bb-fbb2470057f1 378ba6fb-9585-415d-b135-379277ce4b58 8315ee5c-4b67-4964-96d0-8501498a3546 a0d22b8f-7ace-44ba-930b-ae300a5b351e cb680889-91cb-4abc-bac1-6f29cb85003f
e9c66dfe-9f47-4e25-bb91-6e78bc1de7fc
fcc424dc-459d-47b9-ac13-471558956bc8 fde2569d-3540-4253-b90e-6f98f8f74eb4