முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றுகாலை 9.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களது தலைமையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்தோர்க்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நினைவு தினத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கபட்டது. யாழ் பல்கலைகழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழக தொழிற்சங்கம் மற்றும் ஆசிரிய பீடம் ஆகியவற்றின் எற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டு உயிர்நீத்த மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், மட்டக்களப்பு வாகரை மாணிக்கபுரம் ஆற்றங்கரையோரத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை இன்று இடம்பெற்றது.
Read more