நிலச்சரிவு, வெள்ளம்: உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் இலங்கை
 
srilanka_flood_afp_இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய அளவில் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வரையில் இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தகவல்கள் வெளியிட்டுள்ளது.

65 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரம் பேர் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறி 600 நலன்புரி மையங்கள் உட்பட தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. Read more