Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு-(படங்கள் இணைப்பு)  

Video plote vavuniya 

20160522_104604ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு நேற்று (22.05.2016) ஞாயிற்றுக்கிழமை வவுனியா உமாமகேஸ்வரன் வீதிச் சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக கட்சியின் ஸ்தாபகர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மகாநாட்டு மண்டபத்தில் சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. கட்சியின் தலைவர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வெளிநாட்டுக் கிளைகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சுடரேற்றிவைத்து மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், மகாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவரது உரையினைத் தொடர்ந்து கட்சியின் லண்டன் கிளை சார்பில் கலந்து கொண்டிருந்த லண்டன் ஈஸ்ட்ஹாம் உபநகரபிதா போல் சத்தியநேசன், கட்சியின் பிரான்ஸ் கிளை சார்பில் கலந்துகொண்டிருந்த ஜென்னி ஜெயச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் க.சிவநேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் அவர்களால் கட்சியின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. Read more

இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கோரி புளொட் மாநாடு
 
plot mnaadu 01இலங்கையில் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுடன், இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் நோக்கிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புளொட் அமைப்பு மாநாடு ஒன்றை ஞாயிறு அன்று வவுனியாவில் நடத்தியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு பின்னர் அந்த அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. Read more

இலங்கை மழை வெள்ளம், நிலச்சரிவு: 92 ஆக அதிகரித்த உயிரிழப்பு

malayagam01இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
மழை வெள்ளம் தற்போது குறைந்து வருவதால் கணிசமான குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இடர் முகாமைத்துவ அமைச்சகத்தினால் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 86 ஆயிரமாக குறைந்துள்ளது. Read more

விவசாயக் கடன் தள்ளுபடி, 500 மதுபானக் கடைகள் மூடல்: ஜெயலலிதா உத்தரவுகள்
 
jayalalithaஇன்று தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விவசாயக் கடன் தள்ளுபடி, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, பதவியேற்பு விழா முடிந்த பிறகு தலைமைச் செயலகத்திற்குச் சென்று ஐந்து முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். Read more

பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினுக்குப் பின் வரிசையில் இடம் குறித்து சர்ச்சை

stalin_dmkசென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பின்வரிசையில் அமரவைக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, பொன்முடி, வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.
இவர்கள், 10 வரிசைக்கு அப்பால் அமரவைக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. Read more