ஜெயலலிதா, கருணாநிதி எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்பு-

456565666தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகிய நிலையில், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இன்றுகாலை 11மணியளவில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கிய நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, தற்காலிக சபாநாயகர் செம்மலை முன்பாக பேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். மேலும், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதேவேளை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 3ஆம் திதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 6வது முறையாக நேற்று முன்தினம் (23.05.2016) ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றிருந்தார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர். பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக குழு, பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.