யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனமும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கமும் கந்தரோடை இளைஞர் கழகமும் இணைந்து வெள்ள நிவாரண உதவி
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முரசுமோட்டை விஸ்வமடு சுதந்திரபுரம் தேவிபுரம் வல்லிபுரம் ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை நிவாரணப்பொதிகள் மற்றும் புதிய ஆடைகள் சிறுவர்களுக்கான பால்மாக்கள் என பத்துலட்சம் ரூபாய்களுக்கு மேற் பெறுமதியான பொருட்களை யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனமும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கமும் கந்தரோடை இளைஞர் கழகமும் இணைந்து. யாழ் குடாநாட்டு வார்த்தகர்களிடம் சேகரித்து உதவியது.
இவ் நிவாரணப் பொருட்களை அன்பளிப்பு செய்த வர்த்தகர்களுக்கு அம்மக்கள் சார்பாக நன்றிகளையும் இச் சங்கங்கள் தெரிவித்துக் கொள்கின்றன.