வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் இளைஞர் நடைபவனி-(படங்கள் இணைப்பு)-

image-98d0fe067fafb0b9510e52f0827c8b6b372338ed10cfeb55faf2f93da5135379-V2016ஆம் ஆண்டு இளைஞர் தினத்தை முன்னிட்டு வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் இளைஞர் நடைபவனியொன்றினை கடந்த 24.05.2016 செவ்வாய்க்கிழமை அன்று நடாத்தியது. யாழ் ஆரியகுளம் சந்தியில் ஆரம்பமாகிய நடைபவனி முனியப்பர் கோவிலை சென்றடைந்தது. யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் பேரின்பநாயகம் சுதாகர் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலே ஊர்வலத்தினைத் தொடர்ந்து கூட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர் பா.ஜகதீபன், வட மாகாண பணிப்பாளர் சரத் சந்திரசிறி, இளைஞர் சேவை உத்தியோகத்தர்களான யுகராஜ், வினோதினி ஸ்ரீமேனன், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more