தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்திற்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

tholpuram045jpgதாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயல்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்திற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டன. தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத் தலைவரும், சிவபூமி முதியோர் இல்லத் தலைவருமான திரு. ஆறுதிருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சக்கர நாற்காலிகளைக் கையளித்தார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சி ஐங்கரன், பிரதேச வைத்திய அதிகாரி, வலிமேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.சபாநாயகம் மற்றும் எஸ். ஐயலிங்கம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். tholpuram04tholpuram03tholpuram02tholpuram01tholpuram045jpg