வட்டுக்கோட்டையில் நடைபெற்ற வீரமக்கள் தின நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
புளொட் அமைப்பு வருடந்தோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தினுயை 03ம் நாள் நிகழ்வாக யாழ். வட்டுக்கோட்டையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்;வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அங்கத்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது.