வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி-(படங்கள் இணைப்பு)-

vavuniya-telo-280716-seithy (1)கொழும்பு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் நேற்றையதினம் (27.07.2016) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜீலை 27ம் திகதி திங்கட்கிழமை வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், தேவன், நடேசுதாசன், சிவபாதம், சிறீக்குமார், குமார், மரியாம்பிள்ளை, குமாரகுலசிங்கம் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 33ஆவது அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தருமான வினோ நோகராதலிங்கம் அவர்களது தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், வைத்தியக்கலாநிதி சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண அமைச்சர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

vavuniya-telo-280716-seithy (2) (1) vavuniya-telo-280716-seithy (3)