சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்-

slfp (5)ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர், சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. புதிய தொகுதி அமைப்பாளர்கள் 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேருமே ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்மந்தனின் உறுதிமொழியையடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் நிறுத்தம்-

dsfdssஇராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகவும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்த நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் தமது காணிகளைத் தம்மிடமே வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாகப் அவர்களது வாழ்விடங்களிலுள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னால் இரவு பகலாகத் தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் குழுவினரும், பிரதிநிதிகளும் இன்றுபகல் பரவிப்பாஞ்சான் பகுதிக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி தொடர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் அலுவலகத்தை எந்தவொரு படைவீரரும் எதிர்க்க வேண்டியதில்லை-அமைச்சர் பொன்சேகா-

fonsekaகொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, காணாமற்போனோர் காரியாலயம் தொடர்பான சட்டமூலம் பாரளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது அவர், காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு எந்தவொரு படைவீரரும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியதில்லை. படையினர் சட்டத்தை மீறவில்லை. படையினர் மீதான ஆதரவுக்காக பேசவில்லை. எம்மீது சேறு பூசி, சிறையிலைடைத்னர். இராணுவத்திலிருந்து நீக்கி, ஓய்வூதியமும் செலுத்தாமிலிருந்தபோது எவரும் துன்பப்படவில்லை. தற்போது சிலர் முதலைக்கண்ணீர் வடித்தாலும், உண்மை நிலையை ஜனாதிபதி அறிவார் என்றார்.

கொழும்பு – தலைமன்னார் அதிவிரைவு ரயிலில் மோதி நான்கு யானைகள் மரணம்-

aAவடக்கு ரயில் பாதையின் மடு மற்றும் செட்டிக்குளத்துக்கு இடையிலான பகுதியில் கொழும்பு -தலைமன்னார் அதிவிரைவு (எக்ஸ்பிரஸ்) ரயிலில் மோதி நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவுநேர ரயிலில் மோதியே இவை பலியாகியுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி தலைமன்னாரில் இருந்து இரவு 10.30 மணியளவில் புறப்பட்ட ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் ரயில் பாதையில் கூட்டமாக நின்ற யானைளுடன் மோதியுள்ளது. சம்பவத்தில் யானைக் குட்டியொன்றும் மரணித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்க ரயில்வே திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்தால் குறித்த ரயில் அரை மணி நேரம் வரை தாமதமடைய நேரிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் போராளிகளை அமெரிக்க வைத்தியர்கள் மூலம் பரிசோதிக்க முடிவு-

NPC (4)முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். வடமாகாண சபையின் 58வது அமர்வு நேற்று நடைபெற்றது. இங்கு பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக சர்வதேச மருத்துவர்களை கேட்கும் நாம், தற்போது யாழ். குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என சிவாஜிலிங்கம் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மருத்துவ உதவி பொருட்களுடன் வந்த அமெரிக்க விமான படையினருடன் யாழ். வந்தபோது அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அடுல் கேஷாப்பிடம் இந்த விடயத்தை நான் கேட்டிருக்கின்றேன். அதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். முன்னாள் போராளிகள் சிலரை தெரிவு செய்தால் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பௌத்த விகாரை தொடர்பில் எவரும் தீர்மானம் எடுக்க முடியாது-அமைச்சர் ராஜித-

sadsகொக்கிளாய், நாயாறு கிராமங்களில் சிங்கள மக்கள் பரம்பரையாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பௌத்த விகாரை தேவையென்றால் கட்டிக் கொடுக்கத் தயாராகவுள்ளோம். அம்மக்கள் தொடர்பில் எவரும் தீர்மானம் எடுக்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன, வடக்கில் கண்டகண்ட இடங்களில் அரசமரம் வைத்தும் புத்தர் சிலை அமைத்தமையும் “தவறான” செயல் என்றும் குறை கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.