சிறுவர் கொடுமை தொடர்பாக 10ஆயிரத்து 732 முறைப்பாடுகள்-

child protection authorityகடந்த வருடம் மாத்திரம் சிறுவர் கொடுமை தொடர்பாக 10732 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பான சந்தேநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் குற்றவாளிகளுக்கு சட்டரீதியான தண்டனைகள்பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தொலைபேசி இலக்கத்தினூடாகவும், கடிதம் மூலமாக 6889 முறைப்பாடுகள் கிடைத்த போதும் அதில் 14 முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் நேரடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 2000 முறைப்பாடுகளின் விசாரணை அறிக்கையானது நீதிமன்றில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த முறைப்பாடுகளை துரிதமாக விசாரிப்பதற்காக பொலிஸ்மா அதிபர், சிறுவர் மற்றும் பெண்கள் நடவடிக்கைக்கு பொறுப்பான அலுவலகத்தின் பணிப்பாளர் ஊடாக சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கும் படியும் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைப்பு-

jeyakumary (1)தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், இன்று காலை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாலேந்திரன் ஜெயகுமாரியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குறித்த சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.