மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு-(படங்கள் இணைப்பு)-

DSC04529சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு எயிட்ஸ், சயரோகம், மலேரியா ஆகிய நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின்கீழ் (புளுயுவுஆ) முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடத் தொகுதியானது வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களால் 19.08.2016 வெள்ளிக்கிழமை மாலை 3.30அளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராஜா ரவிகரன், (வடமாகாண பிரதி அவைத்தலைவர்) அன்ரனி ஜெகநாதன், கமலேஸ்வரன் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் பூங்கோதை, முன்னாள் பிரதேச சபை செயலாளர், வைத்தியர்கள், தாதியர் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

DSC04521 DSC04532 DSC04538 DSC04545DSC04529