திருகோணமலை களப்புக்கடலில் ஆயுதங்கள் மீட்பு-
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள களப்புக் கடலில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடல் பகுதியில் உள்ள இடமொன்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மீனவர்களின் வலையில் தொடர்ந்தும் ஆயுதங்கள் சிக்குவதினால் நேற்று கடற்பகுதியில் தேடுதல் நடாத்திய போது ரி56 ரக துப்பாக்கி, கைக்குண்டுள் -02 மற்றும் துப்பாக்கி ரவைகள் 535, புகைக்குண்டு 01, துப்பாக்கி பாகங்கள் போன்றனவும் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் கூறியுள்ளனர். இதனையடுத்து தொடர்ந்தும் கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கிளிநொச்சியில் கைதிகள் தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரதம்-
கிளிநொச்சியில் கைதிகள் தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வலி.வடக்கு மீள்குடியமர்வுக்கு 3 மாதகால அவகாசம் தவறின் அத்துமீறிய மீள்குடியேற்றம்-
வலி.வடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் மீள்குடியேறுவார்கள் என வலி.வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலி.வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்தியபோதே மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது, கடந்த டிசம்பர் மாதம் நலன்புரி முகாமுக்கு வருகைதந்த ஜனாதிபதி வலிவடக்கு மக்களை 6மாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது ஐந்து இடங்களை கையளிக்கமுடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை வாசிக்க….. Read more