Iththaavil1கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இத்தாவில் கிராமத்திற்கு (03.09.2016) சனிக்கிழமை விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அப்பகுதி மக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது அம்மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்ததோடு, தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் ஊர்ப் பெரியோர்கள், மாதர் சங்கங்கள் மற்றும் முன்பள்ளிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அன்றையதினம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேம்பொடுகேணி கிராமத்திற்கு விஜயம் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், பிரதேச மாதர் சங்கங்கள் மற்றும் முன்பள்ளிகளின் முக்கியஸ்தர்களையும், ஊர்ப் பெரியோர்களையும் சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்ததோடு, தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விளக்கியுள்ளார். Iththaavil1 iththaavil2 vempodukerny