யாழ் வலிகாமம் மேற்கு மூளாய், மனிதவள முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி நேற்று (04.09.2016) ஞாயிற்றுக்கிழமை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், நிகழ்வின் கௌரவ விருந்தினராக வலிமேற்கு முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் சசி அவர்களும்ம் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களுடன், சிறார்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.