வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய அலங்கார நுழைவாயில் திறப்பு விழாவும், சாதனையாளர்கள் கெளரவிப்பும்.!(படங்கள் இணைப்பு)

இவ் நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அலங்கார நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து குறித்த பாடசாலை மற்றும் அயல் பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 5 புலமைப்பரிசில், மற்றும் க.பொ.த(சா/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட திருநாவற்குளம் கிராம மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய சாரணர் துருப்பில் முதல் ஜனாதிபதி விருதினை பெற்றுக்கொண்ட மாணவனும், வவுனியா மாவட்டத்தின் 44 ஆவது ஜனாதிபதி சாரணனுமான செல்வன் பிரான்சிஸ் கெர்சோன் அவர்களிற்கு புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அதிதிகள் முன்னிலையில் வைத்து கெளரவிப்பு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் சிறப்பு அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களும் கெளரவ அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திரு மு.இராதாகிருஷ்ணன், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை மேம்பாட்டுத் திட்ட வலய பிரதிநிதி திருமதி உபுல் சுஜாதா ஆகியோருடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.