கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்

kilinochifastகிளிநொச்சி பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஒரு வாரமாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள், தற்போது உண்ணாவிரதப் போராட்டமாக மன்னெடுத்து இந்தப் போராட்டம் தொடர்கின்றது. பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அவைகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கோரியிருந்த போதிலும், காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படாத காரணத்தினாலேயே தாங்கள் உணவு உண்ணாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு தொடர் போராட்டமாக ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு பகுதிகளில் ராணுவத்தினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணிகளை படையினர் விடுவித்துள்ளனர்.
ஆயினும், இவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. காணிகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

11,000 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை அதிரடியாக நீக்கிய துருக்கி அரசு

turkey_துருக்கியில் தடை செய்யப்பட்ட பிகேகே என்றழைக்கப்படும் குர்திஸ்தான் பணியாளர்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 11 ஆயிரம் ஆசிரியர்களை துருக்கி அரசாங்கம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
துருக்கியின் தென் கிழக்கே உள்ள சுமார் 14 ஆயிரம் ஆசிரியர்கள் சில வழிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்புவதாக துருக்கி பிரதமர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பள்ளிகள் மற்றும் போலிஸ், ராணுவம் மற்றும் சட்டத்துறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் களையெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விரைவாக விலக வேண்டும்
 
euஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய டொனால்ட் டஸ்க், வெளியேறிய பிறகும் பிரிட்டனுடன் நெருக்கமான உறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் தற்போது தெரீசா மேயின் கையில் தான் முடிவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

ஸ்லோவாக்கியாவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு பிரிட்டன் இல்லாமல் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.

கனவனை வெட்டிக் கொலை செய்த மனைவி நஞ்சருந்தி தற்கொலை முயற்சி

murderமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கனவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மனைவி நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

(8.9.2016) வியாழக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு கல்லடி இசை நடனக்கல்லூரி வீதி நொச்சிமுனைக் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.  பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.வெள்ளத்தம்பி மகேஸ்வரன்(26) என்பவரே இந்த சம்பவத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இவரது மனைவியான மகேஸ்வரன் சிந்து (26) என்பவர் நஞ்சருந்திய நிலையில் அயலவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

கொத்தியபுரத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணமாகி ஒரு வருடமாகின்றது. இவர்கள் குறித்த நொச்சிமுனைக் கிராமத்தில் வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும், இவர்களிருவருக்கும் குழந்தைகள் இல்லையெனவும், இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு இடம் பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கனவனை மனைவி வெட்டி கொலை செய்திருக்கலாமெனவும் கனவனை கொலை செய்து விட்டு மனைவி நஞ்சருந்தியிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களின் வீட்டில் அடிக்கடி சண்டை பிடிக்கும் சத்தம் கேட்கும் எனவும் வழமைபோன்று இரவும் சண்டையிடும் சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் தடயவியல் அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டு இச் சம்பவம் தொடர்பில் விசாரணகளை மேற் கொண்டு வருகின்றனர்.