வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தீர்ப்பது குறித்து, வட மாகாண முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆராய்ந்து, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்திருக்கின்றார்.
யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டபோது, வட மாகாணத்தின் மிகப் பெரிய குளமாகிய, இரணைமடுக்குளத்தின் குளக்கட்டமைப்பை புனரமைக்கும் பணியில் பல்வேறு திணைக்களங்கள் தலையிட்டு, புதிய புதிய பிரச்சினைகளைக் கிளப்பி வருவதாக வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். Read more