brd02இலங்கையின் புதிய அரசியல் சட்ட யாப்பு உருவாக்க குழுவின் முக்கிய அங்கத்தவர் பா.ம.உறுப்பினர் ஜெயம்பதி விக்கிரமரட்ன உலக நாடுகளில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களின் சந்திப்பின்  தொடர்ச்சியாக ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இங்கையர்களை சந்திந்து  புதிய அரசியல் சட்ட யாப்பு தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து அது தொடர்பான விளக்கங்களையும் அளித்தார் இச்சத்திப்பில் புளொட் சர்பில் அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகநாதன் அவர்களும் ஜோமன் கிளைத் தோழர்களான பாவானந்தன், சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.ஜெயம்பதி விக்கிரமரட்ன அவர்களுடனான இச் சந்திப்பில் புளொட் சார்பாக தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய அரசியல் அபிலாசைகளையும் தெளிவாக எடுத்துக் கூறி அதுதொடர்பாக நிரந்தரத்தீர்வு, நிரந்தர சமாதானம் ஏற்பட புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக எடுத்துக் கூறினார்கள். இவற்றை செவிமடுத்த ஜெயம்பதி விக்ரமரட்ன அவர்கள் உங்களுடைய கருத்;துக்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என கூறியதுடன் தாம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடியதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான ஒரு புதிய சட்ட யாப்பையே உருவாக்க முழு முயற்சி எடுப்பதாகவும் கூறினார்.brd02brd03brd01