கடந்த 20 வருடங்களுக்குப் பின்னர் நெதர்லாந்தின் கேஎல்எம் டச் எயர்லைன்ஸ் சேவை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. நெதர்லாந்தின் தலைநகரான அம்ஸ்ரடாமிலிருந்து கொழும்புக்கான நேரடிச்சேவையே ஆரம்பமாகவுள்ளது. முதற் தடவையாக போயிங் 789-900 ரக டிரீம்லைனர் ரக விமானங்கள் இந்தச் சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. 2009இல் சிவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் உல்லாசப் பயணத்துறை கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. Read more