eluvaithivuகிளிநொச்சி இரணைதீவில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் குறித்த பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால  யுத்தம் காரணமாக கடந்த 1992ஆம் ஆண்டுமுதல் இரணைதீவில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 200 மீனவக் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் கடற்றொழில் வளம் கொண்ட தமது மண்ணில் தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு இப்பிரதேச மக்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்விடயம் இராஜாங்க அமைச்சரால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, நேற்றுமாலை முதல் இரணைதீவில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் அனுமதி கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.