h-a-a-sarathkumaraவட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஏ.ஏ சரத்குமார கடமையை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய தினம் காங்கேசந்துறையில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையேற்றுக்கொண்டார்.

இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தனர். பொலிஸ் மரியாதை அணிவகுப்பை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்ட பின்னர் சுப நேரத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றார். இவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 5ஆவது வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.