sdfdfdfகாவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள், வணிகர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, பாமக, தமாகா, காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. Read more