Header image alt text

dsயாழ். மாவட்ட செயலக புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.  புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாக யாழ் சென்றிருந்த பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி தமிழ் கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள் முழங்க பிரதமர் மாவட்ட செயலகத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின்கீழ் நிர்மாணிக்கப்பட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. Read more

maithriஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆவது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளையதினம் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதியுடன் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளனர். Read more

ANANDASANGAREEகாரணம் தெரியாமலும் குற்றம் எதுவும் புரியாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் வலியுறுத்தும் வகையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம், வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். Read more

kilinochchi-marketகிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 100ற்கும் மேற்பட்ட கடைத்தொகுதிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் பாரிய சொத்தழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் பழக்கடைகள், புடவைக் கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன. Read more