யாழ். மாவட்ட செயலக புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது. புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாக யாழ் சென்றிருந்த பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி தமிழ் கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள் முழங்க பிரதமர் மாவட்ட செயலகத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின்கீழ் நிர்மாணிக்கப்பட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. Read more