ANANDASANGAREEகாரணம் தெரியாமலும் குற்றம் எதுவும் புரியாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் வலியுறுத்தும் வகையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம், வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். 1970ஆம் ஆண்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், இவர்கள் மாத்திரம் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.