யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவது மற்றும் வீதி விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. தீர்வு காணப்படாமலுள்ள பல்வேறு குற்றச்செயல்களை விரைவுபடுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பது தொடர்பிலும் சட்டம் ஒழுங்கை முழுமையான முறையில் மாவட்டத்தில் நிலைநாட்ட ஏதுவான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. Read more