கடந்த 16.09.2016 இரவு ஏற்பட்ட தீவிபத்தினால் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ள கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு விஜயம் செய்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த பிரமுகர்களிடம் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வர்த்தக சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். மிகப்பெரியளவில் வங்கிகளில் கடன்பெற்று முதலீடு செய்தே இங்கு வியாபாரங்களை நடாத்தி வந்தோம். இப்போது எங்களால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாது. எனவே கடனை இல்லாமற் செய்வதற்கு வழிசெய்ய வேண்டும் அல்லது அந்தக் கடனைச் செலுத்துவதற்கு எங்களுக்கு ஒரு நீண்ட தவணையைப் பெற்றுத்தர வேண்டும். Read more