dsfdfdமட்டக்களப்பு திக்கோடை தும்பாலை பிரதேசத்தில் 49வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணபதிப்பிள்ளை மாமாங்கம் என்ற 4 பிள்ளைகளின் தந்தை கடந்த 19ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு புறப்பட்டவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கணவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில், நேற்று (21)மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் தொடர்பில் யாராவது அறிந்தால் 0776201665 என்ற தமது தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு காணாமல்போனவரின் மனைவி கோரியுள்ளார்.