suicide-kitவவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா பாடசாலையின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும் அலைபேசி சார்ஜரும் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைப்பதற்கான பணிகள் ஒப்பந்தக்காரர்களால், நேற்று மேற்கொள்ளப்பட்டன. நிலத்தை ஆழமாக்க முற்பட்டபோது வெடிப்பொருட்களை கண்டுள்ளனர். உடன் வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்தின விஜயமுனி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். 12மணியளவில் அவ் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. சம்பவத்தை அடுத்து பொலிஸார், வகுப்பறைகளிலிருந்து மாணவர்களை வெளியேற்ற வேண்டாம் என்று பணித்ததுடன், அகழ்வுப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், அப்பணிகளை மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறியபின் அதாவது மேலதிக வகுப்புகள் நிறைவடைந்ததும் மாலை 3.30க்கு பின்னர் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.