p1400268ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில் ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும் என புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணி நிறைவுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எழுக தமிழ்” பேரணி யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஒரு அணியாகவும், பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்னொரு அணியாகவும் புறப்பட்டு, பேரணிகள் இரண்டும் பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் ஒன்றாக இணைந்து கே.கே.எஸ் வீதியினூடாக வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியை அடைந்தது. Read more