suicideகொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கடற்படை வீரர் தற்கொலை செய்திருக்கலாம் என, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் இவர் நுகேகொடை – ஜம்புகஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவராகும். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.