sfdfdகிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப்படையினர் குண்டை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குண்டு,  6அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதென விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.