பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாரம் நியூஸிலாந்துக்கு விஜயம் செய்யவிருப்பதாக நியூசிலாந்து நாட்டுப் பிரதமர் ஜோன் கீ அறிவித்துள்ளார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பிராந்தியப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜோன் கீ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இலங்கைப் பிரதமரின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். Read more