lasanthaசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை பொரளை கனத்தை மயானத்திலிருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கல்கிசை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவுக்கு அமைவாக சடலம் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30க்கு சடலம் தோண்டிஎடுக்கப்படவுள்ள நிலையில் தற்போது கனத்தை மயானத்திலுள்ள லசந்தவின் கல்லறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.