saarcபாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. உரி என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.

இதற்கு ஆதரவாக பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளும் இந்த மாநாட்டைப் புறக்கணித்தன. ஐந்து நாடுகள் மாநாட்டைப் புறக்கணித்ததால் சார்க் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.