mahinda-body-guardஇலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரதானியாக செயற்பட்ட மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பில் உரிய தகவல்களை வழங்கவில்லை எனக் கோரியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மீண்டும் அடுத்த வருடம் ஜனவரி 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.