yosithaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நிதி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்குத் தொடர்பில் தற்போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், வைத்திய பரிசோதனைகளுக்காக யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக அண்மமையில் அனுமதி கோரியிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இதற்கான அனுமதியை இன்றையதினம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.