chandrikaஅரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக கடந்த அரசாங்கங்களுக்கு சந்தேகங்கள் இருந்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த தசாப்த காலத்தில் சர்வதேச சமூகம் தொடர்பில் ஒரு தவறான தோற்றம் அதிகரித்தது என சுட்டிக்காட்டிய அவர், எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களில் செயற்பாடுகள் சம்பந்தமான அந்தளவுக்கு அழுத்தங்கள் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.விசேடமாக அரசாங்கம் மாத்திரமல்லாது தனியார் துறையினரும் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நேரடியாக பங்கெடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றல் உரையாற்றும் போதே சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.